பெங்களூருவில் மொபைல் செயலி மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்து 7 லட்சத்தை இழந்த 68 வயது முதியவர்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே உணவுகள் வாங்கி சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் ஆடைகள் வாங்குவது என வேலைகள் அனைத்தும் சுலபமாகிவிட்டது. இந்நிலையில், பலரும் தற்பொழுது விமான டிக்கெட் முன்பதிவுகளை மொபைல் செயலிகள் மூலமாகவே செய்து விடுகிறார்கள், இதனால் சிலர் ஏமாற்றமும் அடைகிறார்கள். அதில் ஒன்றாக தற்பொழுது பெங்களூருவை சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ஒருவர் விமான டிக்கெட்டை ஒரு மொபைல் செயலி மூலமாக 7 லட்சத்துக்கு முன்பதிவு செய்துள்ளார்.
அதன் பின் அவரது வங்கி கணக்கிலிருந்து 7 லட்சம் பணமும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் பணம் பெறப்படவில்லை என அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வாடிக்கையாளர் சேவையை அழைத்த போது தொழில்நுட்ப சிக்கல்களால் பணம் கழிக்கப்பட்டதாகவும், அதை திருப்பி தர முடியாது. தங்களின் வேறொரு வாங்கி கணக்கை தாருங்கள் எனவும் கேட்டுள்ளார். அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் காவல்நிலையத்தை அணுகி இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஐடி சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…