வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 68 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் 20 பேரும், மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிதியுதவியையும் அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மின்னல் காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தம். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…