வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழப்பு … தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர்..!

Default Image

வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 68 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  ராஜஸ்தானில் 20 பேரும், மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிதியுதவியையும் அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மின்னல் காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தம். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
vijay yesudas and kj yesudas
lokesh and rajini coolie
Tamilnadu cm mk stalin (3)
Waqf Board - Parliament session
Singer KJ Yesudas
Rashid Khan