கணவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதை பொய் என நினைத்து, அதை வீடியோவாக பதிவு செய்த மனைவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் திருமணமாகிய 4 மாதத்தில் தம்பதிகள் இருவருக்கு இடையேயான முரண்பாடான வாழ்க்கை தற்போது ஒரு உயிரையே மாய்த்துள்ளது. மேற்குவங்கத்தில் வசித்து வரக்கூடிய அமோன் ஷா எனும் 25 வயதுடைய நபர் நேஹா எனும் 21 வயதுடைய பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகி உள்ள நிலையில் இவர்களுக்கிடயே கருத்து வேறுபாடுகள் மற்றும் கசப்புகள் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு டெல்லிக்கு சுற்றுப்பயணம் சென்று இவர்கள் வெளியில் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து செல்ல நேஹா முடிவெடுத்துள்ளார்.
அமோன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனால், நேஹா அண்மையில் விவகாரத்திற்கு கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்மையில் அமோன் ஷா தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவியிடம் கூறி உள்ளார். ஆனால் அவரது மனைவி எவ்வித பதற்றமும் இன்றி, அவர் தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக எடுத்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து தற்கொலை செய்து கொண்ட அமோனின் உடலை கைப்பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவரது குடும்பத்தினர் வேலூருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து அமோனின் சகோதரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்ததாகவும், தனது சகோதரர் நேஹாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும், ஆனால் நேஹா அதை மறுத்து வந்ததாகவும் அமோனின் சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், நேஹா மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து நேஹாவிடம் போலீசார் விசாரித்தபோது, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது கணவர் தன்னிடம் கூறினாலும், இது போல பல முறை மிரட்டியுள்ளதால்அவர் தன்னை மிரட்டுவதாக தான் அவர் நினைத்ததாகவும், எனவே தான் அதை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நேஹாவின் கருத்து சற்று முரண்பாடாக இருப்பதால் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதை மனைவி வீடியோவாக எடுத்து, கணவரின் உயிரும் தற்பொழுது பிரிந்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…