மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 6,555 பேருக்கு தொற்று உறுதி!

Default Image

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,555 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,619 ஆக உயர்வு.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்புஅதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இன்று ஒரே நாளில் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,06,619 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 151 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8822 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,11,740ஆக உயர்ந்துள்ளது. அங்கு 86,040 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்