ராஜஸ்தானில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

Default Image

ராஜஸ்தானில் கொரோனாவால் இதுவரை 3427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,342 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,886 ஆகவும் உள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட 56,342 பேரில் இதுவரை 16,540 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது. நாட்டிலேயே அதிகமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 17,974 பேர் பாதிக்கப்பட்டு, 694 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை 3427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,491 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,916 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,475 பேர் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்