உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 600 கிராமங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன் இல்லாத அளவு இம்முறை அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர்மழையால் கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் அருகில் உள்ள 600 கிராமங்கள் தற்போது தண்ணீருக்குள் மூழ்கிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் இதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்கே நிவாரண பணிகளை அதிகமாக செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் பல கிராம மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் இணைந்து இந்திய ராணுவ வீரர்களும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…