60 கி.மீ.க்கு இடையில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்குமானால் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும் டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான, எம்பியுமான தொல். திருமாவளவன் இதுதொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர், 2024-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் சாலையைப் போன்று நாட்டின் சாலைகள் சிறப்பாக இருக்கும். சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது விவசாயத்துடன் சுற்றுலாத் துறையிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த ஆண்டு முடிவதற்குள் ஸ்ரீநகர் முதல் மும்பை வரை சாலை வழியாக 20 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்று அவர் உறுதியளித்தார்.

வருங்காலத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றடையலாம் என்றும் தெரிவித்தார். திறமையான தளவாட உள்கட்டமைப்பை அதிகரிக்க நாடு முழுவதும் 22 பசுமை நெடுஞ்சாலை வழித்தடங்கள் அமைக்கப்படும். புதிய சாலைகளை உருவாக்குவதற்காக வெட்டப்படும் மரங்களை நடுவதற்கு ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட இடத்தில் இரண்டு விபத்துகள் நடந்தால், அப்பகுதி கரும் புள்ளியாக அறிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் மின்சார வாகனங்களின் விலை வெகுவாகக் குறையும் என்றும் கட்கரி உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago