ஜம்முவில் 6 , காஷ்மீரில் ஒரு சட்டமன்ற இடமும் அதிகரிக்கப்படும்..?- எல்லை நிர்ணய குழு ..!

Published by
murugan

எல்லை நிர்ணய ஆணைய கூட்டத்தில், ஜம்மு பிரிவுக்கு 6 இடங்களையும், காஷ்மீர் பிரிவுக்கு கூடுதலாக ஒரு இடமும் எல்லை நிர்ணய குழு முன்மொழிந்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டமன்ற இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான  எல்லை நிர்ணய ஆணையக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணையக் கூட்டத்தில் முதல் முறையாக அனைத்து இணை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் இன்று நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணையக் கூட்டத்தில், ஆணையத்தின் குழு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய வடிவத்தை முன்வைத்தது.

இதில், ஏழு கூடுதல் சட்டசபை இடங்கள் முன்மொழியப்பட்டன. அதில், ஜம்மு பிரிவிற்கு 6 இடங்களும், காஷ்மீர் பிரிவிற்கு ஒரு இடமும் என்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஜம்முவில் தற்போதுள்ள 37 இடங்களிலிருந்து 43 ஆகவும், காஷ்மீரில் தற்போதைய 46 இடங்களிலிருந்து 47 ஆக இருக்கும். டிசம்பர் 31, 2021க்குள் தங்கள் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு இணை உறுப்பினர்களை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆணையத்தின் வரைவுக்கு தேசிய மாநாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

Published by
murugan

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago