பஞ்சாப் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறையால் 6 நோயாளிகள் உயிரிழப்பு…!

Default Image

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நீல்காந்த் என்ற தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் ஒரு பக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நீல்காந்த் என்ற தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 5 நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினோம்.

மேலும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறி விட்டதாக அவர் தெரிவித்தார். நான்கு நாட்களுக்கு பின் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்