6 வயது சிறுமிக்கு உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை!

Default Image

6 வயது சிறுமி, உத்தர பிரதேசத்தில்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த கிராமவாசி ஒருவர் வயல்வெளிக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார்.

மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இச்செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

கத்துவா, உன்னாவ் பகுதிகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்