Categories: இந்தியா

காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணி கிடையாது – தேவேகவுடா..!

Published by
Dinasuvadu desk
கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையாக வந்தாலும், ஆட்சியமைக்க முடியவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் இடையே அமைச்சர் பொறுப்பு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கர்நாடக தேர்தல் முடிவானது பா.ஜனதாவை எதிர்க்கொள்ள வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதை காட்டுகிறது என்பது அரசியல் வல்லுநர்கள் கருத்து.
இதற்கிடையே பிராந்திய கட்சிகள் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணி என்ற நகர்வை நோக்கி செல்கிறது. காங்கிரஸ் கர்நாடகாவில் நடந்து கொண்டது போன்று, பிராந்திய கட்சிகளுடன் இணைக்கமாக செயல்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைவதற்கு பாடமாக அமைந்து உள்ளது. இந்நிலையில்
காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணியை உருவாக்க முடியாது என தேவேகவுடா கூறிஉள்ளார்.
தி இந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவேகவுடாவிடம், காங்கிரஸ் இல்லாது பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணி சாத்தியமானதா? என கேள்வி எழுப்பட்டு உள்ளது. நேர்மையான முறையில் பதிலளிக்கிறேன், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைக்கும் நிலையில், காங்கிரஸை தவிர்த்து பா.ஜனதா எதிர்ப்பு அணியை உருவாக்குவது சாத்தியம் கிடையாது என்றுதான் நினைக்கிறேன்.
இந்தியா முழுவதும் இருக்கும் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் முதன்மையிடத்தில் நிற்கும். தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் மோடி மற்றும் பாரதீய ஜனதாவிற்கு எதிரான கூட்டணி இயற்கையாகவே அமைந்துவிடும், இவ்விவகாரத்தில் எந்தஒரு நகர்விலும் என்னுடைய தலையீடு என்பது இருக்காது என்பதையும் தெளிவு செய்கிறேன்,” என கூறிஉள்ளார்.
கர்நாடக அரசியல் நாடகங்கள் தொடர்பாக பேசியுள்ள தேவேகவுடா, குதிரை பேரத்தை ஒடுக்கி ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago