“5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது” – COAI ஜெனரல் எஸ்.பி.கோச்சார்…!

Published by
Edison
  • 5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது என செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் (COAI) இயக்குனர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த 5ஜி தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது எனவும்,அதற்கு தடை விதிக்கக் கோரியும் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், இது குறித்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஜூகி,

  • “5ஜி தொழில்நுட்பத்தின் கதிரியக்கத்தால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
  • தற்போது உள்ள கதிரியக்க அளவை விட 10 முதல் 100 மடங்கு அதிகமான கதிர்வீச்சை இந்த 5ஜி தொழில்நுட்பம் வெளியிடுவதால் மனிதர்களுக்கு மீள முடியாத கடுமையான பாதிப்பையும், சுற்றுச்சூழல் அமைப்பு நிரந்தர சேதத்தை உருவாக்கும்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
  • இதனையடுத்து,இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன்,5ஜி சேவைக்கு தடை விதிக்கக் கோரிய பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவிற்கு 20 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,இதுகுறித்து,செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் எஸ் பி கோச்சார் கூறுகையில்,

  • “தொலைத் தொடர்புத் துறையில் மின்காந்த கதிர்வீச்சு வரம்பிற்கான நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவின் தரங்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களை விட மிகவும் கடுமையானவை.
  • அதன்படி,இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.எனவே ஏற்கனவே எங்கள் அமைப்புகள் இதை கணக்கில் எடுத்துக்கொண்டன.
  • இந்தியாவில்,கதிர்வீச்சு மற்றும் தாக்கம் குறித்த எந்தவொரு கருத்தும் தவறாக உள்ளன.
  • இவை தவறான அச்சங்கள் மற்றும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் இது எப்போதும் நிகழ்கிறது”, என்று கூறினார்.
  • மேலும்,நடிகை ஜூகி சாவ்லாவுக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று,”இந்த தீர்ப்பானது தவறான வதந்திகளைத் தடுத்து நிறுத்துகிறது.
  • இதன்மூலம்,மற்றவர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது குறையும்.
  • அதுமட்டுமல்லாமல்,5G தொழில்நுட்பத்தால்,உடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் முற்றிலும் தவறாக உள்ளது.ஏனெனில்,5G தொழில்நுட்பம் பாதுகாப்பானது.
  • மேலும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை ஆதரிக்கிறது.
  • எனவே,செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (சிஓஏஐ), 5 ஜி ஒரு “கேம் சேஞ்சர்” என்பதை நிரூபிக்கும்.மேலும்,பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான நன்மைகளுக்கு வழிவகுக்கும்” என்றும் வலியுறுத்தினார்.
Published by
Edison

Recent Posts

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

2 hours ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

2 hours ago

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே  இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…

2 hours ago

தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…

3 hours ago

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…

3 hours ago

தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

4 hours ago