58 இந்தியர்கள் முதற்கட்டமாக தாயகம் திரும்பினர்.!

Default Image

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 237 பேர் பலியாகி உள்ளனர். 7,000 பேருக்கு மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரானுக்கு புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் சுமார் 2,000 பேர் அங்கு இருப்பார்கள் என தகவல் கூறப்பட்டது. பின்னர் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இந்தியர்களை மீட்டுவர உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி–17 என்ற விமானம் மருத்துவ குழுவுடன் நேற்று ஈரான் புறப்பட்டது.

அந்த விமானம் முதற்கட்டமாக 58 இந்தியர்களுடன் காசியாபாத் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், சவாலான நேரத்தில் பணியாற்றிய ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய விமானப்படைக்கும் நன்றி என்றும் ஈரானில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பணியாற்றி வருகிறோம் எனத்தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting