கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் நெகட்டிவ் என்று கூறி போலி அறிக்கை வழங்கிய சில நாட்களில் 57 வயதான நபர் இறந்ததை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 57 வயதான வங்கி மேலாளர் சின்ஹா என்பவர் கொரோனாவுக்கான பரிசோதனை செய்துள்ளார். ஆனால் தனியார் நோயறிதல் பரிசோதனை மையத்தில் உள்ள ஊழியர்கள் கொரோனா இல்லை என்ற போலி அறிக்கையை வழங்கியதுடன், சின்ஹாவுடன் ரூ. 2,000 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து, ஒரு சில நாட்களில் சின்ஹாவின் உடல் மோசமடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பின்னர், நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சின்ஹாவின் மனைவி போலி பரிசோதனை மையத்தின் மீது புகார் அளித்ததை அடுத்து 3 பேரை கொல்கத்தாபோலீசார் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட பிஸ்வாஜித் மற்றும் இந்திரஜித் சிக்தர் ஆகியோர் சகோதரர்கள் என்றும், அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிந்தவர்கள் என்றும், மற்றொருவர் அனித் பைரா ஒரு பிசியோதெரபி மையத்தை நடத்தி வருபவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…