புனேயில், ஏப்ரல் 18ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை.
புனேயில், ஏப்ரல் 18-ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீஸ் நான்கு மூத்த ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், பிரிகேடியரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு இராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பிரிகேடியர் தரவரிசை அதிகாரி, ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் மேஜர் பதவிகளில் உள்ள இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பணியமர்த்தப்பட்ட பிரிகேடியர் ஏப்ரல் 18-ஆம் தேதி தனது பணியாளரின் காரில் புனே ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் இயக்க கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறிவிட்டு, பிளாட்பார்ம் எண் 3-ல் தண்டவாளத்தில் ஓடிய ரயிலின் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…