புனேயில், ஏப்ரல் 18ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை.
புனேயில், ஏப்ரல் 18-ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீஸ் நான்கு மூத்த ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், பிரிகேடியரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு இராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பிரிகேடியர் தரவரிசை அதிகாரி, ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் மேஜர் பதவிகளில் உள்ள இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பணியமர்த்தப்பட்ட பிரிகேடியர் ஏப்ரல் 18-ஆம் தேதி தனது பணியாளரின் காரில் புனே ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் இயக்க கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறிவிட்டு, பிளாட்பார்ம் எண் 3-ல் தண்டவாளத்தில் ஓடிய ரயிலின் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…