டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் வயது முதிர்ந்த ஒருவர் தனது 6 பேரக் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று, தனது மனைவியும், 22 வயது நிரம்பிய ஒரு ஆணும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக புகார் அளித்துள்ளார். பின்னர் போலீஸ் விசரணையில், பிரகாஷ் நகரில் வசித்து வரும் அந்த பெண்ணும், அந்த இளைஞரும் இரண்டு வருடங்களாக தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பெண் பேசுகையில், தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழப்போவதாக முடிவெடுத்து விட்டதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காதல் எந்த வயதிலும் வரலாம், அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். அவர் காதலரான 22 வயது இளைஞரை விசாரித்த போது, அந்த பெண் தன்னுடைய நம்பிக்கைக்குரிய காதல் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இருவர் குடும்பத்தினரும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தங்களை சேர்ந்து வாழவிடவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போதும் கூட, அவர் தன்னுடைய 54 வயது காதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார். இறுதியாக அவர்கள் இருவரையும் கைவிடுவதாக, இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…