தினமும் கொரோனா நோயாளிகளுக்கு 5,000 வழங்கப்படும் – ஹரியானா முதல்வர் அறிவிப்பு!

Published by
Rebekal

ஹரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே தான் செல்கிறது. அது போல ஹரியானாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி குறைவாக காணப்படுவதால் பலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறக்கடிய பல நோயாளிகளின் குடும்பத்தினர் மிக எளிமையான பின்புலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் சரியாக பணம் கட்ட முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளுக்கு தினமும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் கூறுகையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் தினமும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அதிகபட்சமாக 7 நாட்களுக்கு என ஒரு நபருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது அவர்களுடைய மருத்துவ செலவுக்கான தொகை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல தனியார் மருத்துவமனைகளும் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தினமும் ஒதுக்க வேண்டும் எனவும், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஏழு நாட்களுக்கு 7000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

13 minutes ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

48 minutes ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

2 hours ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

2 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

4 hours ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

5 hours ago