நேற்று பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.இந்த செயற்கைக்கோள்கள் புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், இயற்கை பேரிடர் போன்றவைகளுக்கு உதவும் வகையில் உள்ளது
விண்ணில் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் பாய்ந்த பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் , இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைகோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் 17 டன் செயற்கைகோள்கள் வணிக ரீதியிலானவை. இன்று 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அனுப்பப்பட்டு உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெற்று உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டின் மொத்த எடையில் 56 சதவீத எடை வெளிநாடு செயற்கை கோள்களுக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரோவின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று கூட சொல்லலாம் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக உள்ளது. இதுவரை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நிலவுக்கும், செவ்வாய்க்கும் மட்டுமே செயற்கைகோள்களை கொண்டு சென்றுள்ளது.
இந்த ஆண்டு ராக்கெட் ஏவும் அனைத்து பணிகள் முடிந்தன. விரைவில் சூரியனின் வெளிப்புறத்தில் ஆராய்வதற்கு ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்படம். இதுவும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. அந்தவகையில் அடுத்த 5 ஆண்டுகளில் மட்டுமே 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவதிட்டமிடப்பட்டு இருக்கிறோம் என கூறினார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…