கொரோனா மீட்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா மீட்புப் பணியின் போது உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை ஏப்ரல் 26 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்தக் காப்பீட்டு திட்டத்தில்,22 லட்சம் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும்,இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில்,மார்ச் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்,அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தை திரும்பப் பெறுவதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இவ்வேளையில்,மத்திய அரசின் இந்த அறிவிப்பு மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…