கொரோனா மீட்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா மீட்புப் பணியின் போது உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை ஏப்ரல் 26 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்தக் காப்பீட்டு திட்டத்தில்,22 லட்சம் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும்,இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில்,மார்ச் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்,அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தை திரும்பப் பெறுவதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இவ்வேளையில்,மத்திய அரசின் இந்த அறிவிப்பு மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…