பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை..! மத்திய அரசு அதிரடி..!

Default Image

மத்திய அரசு பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு. 

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 22ம் தேதி பிஎஃப்ஐ-க்கு சொந்தமான 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பிஎஃப்ஐ நிர்வாகிகள் மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து, மத்திய அரசு தற்போது, பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உள்ளது. இந்த தடை அதன் துணை அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும், பி.எஃப்.ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்