டெல்லி TO பெங்களூர் – சும்மா தனியா கெத்தா விமானத்தில் பயணித்த 5 வயது சிறுவன்.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் இயக்கப்பட்ட விமானத்தில் 5 வயது சிறுவன் தனியாக பயணித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தற்போதுவரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஸ், ரெயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்து 25-ம் தேதி நேற்று முதல் இயக்கப்பட்டது. 

மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகலவசம் அணியவேண்டும் என்றும் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அதன்படி, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மஞ்சித் ஷர்மா என்ற பெண்ணின் 5 வயது மகன் விவான் ஷர்மா, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள அந்த சிறுவனின் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார்.

திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால், விமான சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நிறுத்துவைக்கப்பட்டது. இதனால், தாயை பிரிந்து, 3 மாதம் பாட்டி வீட்டில் தங்கினார் அந்த சிறுவன். நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியதால், டெல்லியில் இருந்து பெங்களுருவுக்கு இயக்கப்பட்ட விமானத்தில் தனியாக பயணித்தார். வயதான தாத்தா, பாட்டி அந்த சிறுவனுடன் பயணிக்க விமான விதிகள் இடமளிக்காத நிலையில், உறவினர்கள் யாருமின்றி தனியாக பெங்களூருவுக்கு விமானத்தில் சிறுவன் வந்து சேர்ந்தான். மூன்று மாதங்களுக்கு பிறகு மகனை சந்தித்த தாய், கண்ணீருடன் தனது மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…

13 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…

56 minutes ago

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

13 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

15 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

16 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

18 hours ago