கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Published by
Venu
சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம்.
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் கோயிலில் வைத்து 8 வயது சிறுமி கொடூரமாக பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறார் உட்பட 8 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை பஞ்சாப்பில் உள்ள பதான் கோட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று பதான் கோட் நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பு வழங்கியது.அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான் கோட் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன் பின்னர் தண்டனை விவரம் மதியம் அறிவிப்பதாக தெரிவித்தது.இந்நிலையில் தற்போது  சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம்.அதன்படி ஊர் தலைவரும் பூசாரியுமான சஞ்சி ராம் ,தீபக், பர்வேஸ் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம்.மேலும் உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த தத்தா, சுரேந்தர் வர்மா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர் தலைவரும் பூசாரியுமான சஞ்சி ராமின் மகன் விஷாலை விடுவித்து  தீர்ப்பு வழங்கியுள்ளது பதான் கோட் நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

5 minutes ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

47 minutes ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

58 minutes ago

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

2 hours ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

2 hours ago

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

3 hours ago