காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

Published by
லீனா

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டம் நயிரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிளும், புத்கம் மாவட்டத்தின் சரார் ஐ ஷரீப் பகுதியில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் அவர்கள் கூறுகையில், ‘மணி நேரமாக நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பில் கமாண்டராக செயல்பட்ட ஜாகித் வானி. மற்றொருவன் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி. மற்ற 3 பேரும், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். இது, பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.’ என தெரிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கி சூடு நடத்த இடத்தில் இருந்து, துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையிர் ஈடுபட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

54 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago