கொரோனா வைரஸ் … மருத்துவமனையில் இருந்து 5 பேர் தப்பி ஓட்டம் ..

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் மாயோ பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிக்சை பெற்று வந்த ஐந்துபேர் தப்பி சென்று உள்ளனர். பின்னர் அவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.

இது குறித்து நாக்பூர் போலீஸ் துணை ஆய்வாளர் எஸ்.சூர்யவன்ஷி கூறுகையில் ,தப்பிய ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. மேலும் மற்ற நான்கு பேரின் அறிக்கைகள் வரவில்லை. வந்த பிறகே அவர்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறது என கூறமுடியும் என கூறினார்.

நாக்பூரில் 16 பேர் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் பாதிப்பு கருத்தில் கொண்டு மும்பை, தானே, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் மக்கள் அதிகமாக கூடும் தியேட்டர்கள்,  உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்