#BREAKING: 5 மாநில தேர்தல்: பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..!

Published by
murugan

பிப்ரவரி 11 வரை ஊர்வலம், மிதிவண்டி பேரணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்கு இன்று வரை( ஜனவரி 31 வரை) தடை விதித்தது. இதனால், இன்று முதல் இந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கும் என எதிர்பட்டப்பட்ட நிலையில், பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டித்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால்  கூடுதல் தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • அதன்படி, பிப்ரவரி 11 வரை ஊர்வலம், மிதிவண்டி பேரணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-லிருந்து 20 ஆக அதிகரிப்பு.
  • உள்ளரங்கு பரப்புரைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300லிருந்து 500 ஆக அதிகரிப்பு.
  • அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொரோனா நடத்தை மற்றும் வழிகாட்டுதல்கள் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம்  பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 7 மணி முதல் மார்ச் 7 ஆம் தேதி மாலை 6:30 மணி வரை எந்தவித கருத்துக் கணிப்புக்கும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GO

Recent Posts

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

15 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

38 minutes ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

1 hour ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

10 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

12 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

13 hours ago