Congress leader Mallikarjun kharge [Image source : PTI]
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் கட்சி அனைத்து செயல்பாடுகளிலும் முழு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, காங். மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரிங்கா காந்தி, ப.சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டத்தில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…