கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 524 ஆக உயர்வு.!

Default Image

கேரளாவில் இதுவரை 524 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனா கண்டறியப்பட்டவர்கள் மலப்புரம் 3, பதனம்திட்டா 1, கோட்டயம் 1 என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 

கேரளாவில் இதுவரை 524 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் இதுவரை 38,547 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, 37,727 பேருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. தற்போது கண்காணிப்பில் 31,616 பேர் இருக்கின்றார்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்