காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் 5பயங்கரவாதிகள் கொலை!

Published by
Rebekal

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அவ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதலின்போது முதலில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

மேலும் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஹிண்டுவால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் அவர்கள், கடந்த புதன்கிழமை மட்டும் காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவர்களில் லக்ஷர் இ தொய்பா மற்றுமொருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் பிற இடங்களில் தொடர்ந்து பயங்கரவாதிகள் குறித்த விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago