2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை…!

Published by
Rebekal

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களில் இரண்டு வயது குழந்தையும் அடங்கும். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ராம்குமார், குசும் தேவி, மனிஷா, சவிதா, மீனாட்சி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சாக்ஷி எனும் ஐந்து வயது குழந்தையையும் கொலை செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி அஜய் குமார் கூறுகையில், 5 பேரின் தலையிலும் பலத்த காயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொடூரமான கொலையை செய்தவர்கள் யார் என்பதை விசாரிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கான விசாரணை மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியோடு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago