ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த கொரோனா நோயாளி குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு – டெல்லி அரசு!

Published by
Rebekal

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நள் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் டெல்லியிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதால், அங்கு தீவிரமான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை சற்றே அங்கு குறைந்திருந்தாலும், டெல்லியில் பல நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50000 நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 25 வயது வரை 2500 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிரந்தது. மேலும்  குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் அல்லது குடும்ப தலைவர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தால் அந்த குடும்பத்திற்கு 2500 மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

கணவரும் இறந்திருந்தால் மனைவிக்கு 2500 ரூபாய் ஓய்வூதியம், மனைவி இறந்திருந்தால் கணவருக்கு 2500 ரூபாய் ஓய்வூதியம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ள  நிலையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago