ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த கொரோனா நோயாளி குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு – டெல்லி அரசு!

Published by
Rebekal

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நள் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் டெல்லியிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதால், அங்கு தீவிரமான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை சற்றே அங்கு குறைந்திருந்தாலும், டெல்லியில் பல நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50000 நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 25 வயது வரை 2500 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிரந்தது. மேலும்  குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் அல்லது குடும்ப தலைவர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தால் அந்த குடும்பத்திற்கு 2500 மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

கணவரும் இறந்திருந்தால் மனைவிக்கு 2500 ரூபாய் ஓய்வூதியம், மனைவி இறந்திருந்தால் கணவருக்கு 2500 ரூபாய் ஓய்வூதியம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ள  நிலையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!

INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…

10 minutes ago

“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!

ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…

38 minutes ago

பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!

சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…

55 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!

ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

1 hour ago

அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை :  அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…

2 hours ago

காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!

சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…

2 hours ago