சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், டிவைடரில் மோதிய நிலையில், கார் மீது எதிர்ப்புறம் வந்த லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அனந்தபூரில் உள்ள ராணி நகரை சேந்த ஷேக் பாஷா என்பவர் தனது திருமணத்திற்காக ஹைதராபாத் சென்று துணிகள் வாங்கிவிட்டு திரும்பும் போது அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.
அப்போது, ஹைதராபாத் நோக்கி சென்ற லாரி ஒன்று கார் மீது பலமாக மோதி இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…