Indian Army Soldiers [File image]
ஜம்மு காஷ்மீர்: இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பத்னோட்டா பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வந்திருந்த போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் கொண்டும், துப்பாக்கி மூலமும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருந்தும், பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் இதுவரை 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தி வருவதாவும், பயங்கரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்து உள்ளதாகவும், காஷ்மீர் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…