ஜம்மு காஷ்மீர்: இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பத்னோட்டா பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வந்திருந்த போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் கொண்டும், துப்பாக்கி மூலமும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருந்தும், பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் இதுவரை 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தி வருவதாவும், பயங்கரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்து உள்ளதாகவும், காஷ்மீர் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…