ராஜஸ்தான் நிர்வாக தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் வெற்றி பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த ராஜஸ்தான் பொது சேவை மையம் மற்றும் ராஜஸ்தான் நிர்வாக சேவை மையம் தேர்வில் வெற்றி பெற்று, நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
இதில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகள்கள் தேர்வாகியுள்ளனர். இவரின் பெயர் ஸ்ரீ சஹதேவ் சஹாரன். இவருக்கு 5 மகள்கள். இதில் ஏற்கனவே ரோமா மற்றும் மஞ்சு என்ற இரண்டு மகள்கள் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகுதி பட்டியலில் இவரின் மற்ற மூன்று மகள்களான அன்ஷூ, ரீது மற்றும் சுமன் ஆகியவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தெரிவித்துள்ளதாவது,
இது ஒரு அருமையான நல்ல செய்தி. அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமன்கரைச் சேர்ந்த மூன்று சகோதரிகள். இன்று மூவரும் சேர்ந்து RAS தேர்வில் தேர்வு செய்யப்பட்டனர். தந்தை மற்றும் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…