5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு..மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை.!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 48 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அரசு உயர்த்தும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களின் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தின் 30 சதவீத வருமானம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களிலிருந்து வருகிறது. ஏற்றுமதியில் 48 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களிலிருந்து வந்தவை.
இன்று வரை 11 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளோம் என டெல்லியில் இணையம் வழியாக “லெட்ஸ் எண்டோர்ஸ் டெவலப்மென்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கட்கரி கூறினார். வரவிருக்கும் 5 ஆண்டுகளில் 48 சதவீதத்திலிருந்து 60 சதவீத ஏற்றுமதியாகவும், 5 கோடி பேருக்கு புதிய வேலைகளை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதுபோன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை கிடைக்காது என எனக் குறிப்பிட்டார். அத்தகையவர்களை பதிவு செய்ய ஊக்குவிக்க எங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி தேவை என்று அவர் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மாற்றாக இப்போது சிந்திக்க வேண்டும் எனவும் , நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025