Categories: இந்தியா

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Published by
அகில் R

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார்.

ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள் இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் நம் நாட்டில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான தனி நபர்கள் இது போன்ற மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழந்துள்ளனர். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களுருவில் 52 வயதான தொழிலதிபர் ஒருவர் இது போன்ற மோசடியில் சிக்கி ரூ.5.2 கோடி இழந்துள்ளார்.

கடந்த மார்ச்-11 ம் தேதி அன்று பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சரத்துக்கு வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதில் லாபகரமான பங்குச் சந்தை வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றால் bys-app.com யிலிருந்து ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்யும்படி இருந்தது. ஆனால் அவர் அதை க்ளிக் செய்யாமல் புறக்கணித்தார். பின் Y-5 எவர் கோர் ஃபைனான்சியல் லீடர் (Y-5 Ever Core Financial Leader) என்ற வாட்ஸ்-ஆப் குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சரத் அதையும் புறக்கணித்துள்ளார். மேலும், அந்த மோசடி கும்பல் இவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் இவரை பல முறை தெரியாத எண்களில் இருந்து போன் செய்து  அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய ஆசை வார்த்தைகள் பேசி அவரை தூண்டி உள்ளனர். ஆரம்பத்தில் அவர் தயங்கினாலும், இறுதியில் இதை ஒரு முறை முயற்ச்சித்து பாப்போம் என மனமிறங்கி சரத் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல்-2 ம் தேதிக்குள் அந்த மோசடி கும்பல் பொய்யான சில வங்கி கணுக்குகளை காண்பித்து அவரை நம்ப வைத்து அந்த கணுக்குகளில் சிறுது சிறுதாக பணத்தை முதலீடு செய்ய வைத்து மொத்தமாக ரூ.5.2 கோடியை முதலீடு செய்ய வைத்துள்ளனர். சிறுது நாட்களுக்கு பிறகு தமக்கு லாபம் ஏதும் வராமல் இருக்கையில், பாதிக்கப்பட்டவர் தனது லாபத்தில் சிலவற்றை திரும்பப் பெற முயன்றபோது மோசடி செய்பவர்கள் மறுத்துவிட்டனர்.

அப்போது தான் அவருக்கு தாம் மோசடி கும்பலால் ஏமாற்ற பட்டுளோம் என உணர்ந்துள்ளார். அதன் பின் பெங்களூரு காவல் துறைக்கு அவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் (FIR ) மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து இந்த குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Recent Posts

”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

1 hour ago

“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…

2 hours ago

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

4 hours ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

5 hours ago

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே  இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…

5 hours ago

தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…

5 hours ago