450 வழக்கு பதிவு ..1,407 பேர் கைது..இன்னும் கைது தொடரும்…கேரள டிஜிபி அதிரடி…!!

Default Image
சபரிமலை விவகாரத்தில் கைது நடவடிக்கை தொடரும் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 210 பேருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டனர். 210 பேரின் புகைப்படங்களையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.
Related image
அந்த படங்களை எல்லா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட பக்தர்களை அடையாளம் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.அதன்படி, 210 பக்தர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் 71 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 40 பேர், பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் தலா 30 பேர் ஆகியோர் அடங்குவர்.
இதுபோல், மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறந்து இருந்தபோது, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதன்மூலம், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்தது. எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சபரிமலை விவகாரம் கேரளா முழுவதும் போராட்டம்: கைது நடவடிக்கைகள் தொடரும் கேரள டிஜிபிஇந்தநிலையில்,போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா செய்தியார்களிடம் கூறியதாவது:
இதுவரை 450 வழக்குகள் பதிவு செய்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். பலரை அடையாளம் கண்டுள்ளோம். இன்னும் கைது தொடரும். சட்டப்படி எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.பெண்களை பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து செல்வது குறித்து போலீஸ் குழுவிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். அரசிடமும் கேட்டுள்ளோம். தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்