பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.8 கோடி நிதியுதவி அளித்த இந்தியன் வங்கி

Default Image

இந்தியன் வங்கி 8 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்  இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 3000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.

எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியன் வங்கி 48000 ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.அதன்படி ரூ.8.10 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்