மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால், நாங்கள் முடக்கவில்லை. அது தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது.
பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏதாகிலும் ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவற்றை கருத்தில் கொண்டு #Resignmodi என்ற ஹேஷ்டேக் பேஸ்புக் பக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஹேஸ்டேக் உருவாக்கப்பட்ட சில மணி துளிகளில் இதில் மளமளவென பதிவுகள் பதிவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென இந்த ஹேஸ்டேக் காணாமல் போனது. இதனையடுத்து மத்திய பாஜக அரசு பேஸ்புக் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததால் தான் #Resignmodi என்ற ஹேஸ்டேக் நீக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இதனையடுத்து மீண்டும் இந்த ஹேஷ்டேக் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால், நாங்கள் முடக்கவில்லை. அது தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது. மீண்டும் இந்த ஹேஸ்டேக் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. நீண்ட நாட்களாக திமுகவினர் எதிர்நோக்கி காத்திருந்த '…