425 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்; 5 பேர் கைது.!

Default Image

ரூ.425 கோடி மதிப்பிலான 61 கிலோ போதைப் பொருள்களுடன் சென்ற ஈரானியப் படகை, இந்தியக் கடலோர காவல்படை கைது செய்தது.

குஜராத்தில் அரபிக்கடலில் ரூ.425 கோடி மதிப்புள்ள 61 கிலோ ஹெராயினுடன் 5 பேருடன் சென்ற ஈரானிய படகு ஒன்றை, இந்தியக் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. குஜராத்தின் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

படகு மற்றும் 5 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக ஓகாவுக்கு கொண்டு வரப்பட்டனர். உளவுத்துறை தகவலின்படி இந்திய கடலோர காவல்படை, தனது இரண்டு விரைவு ரோந்து வகை கப்பல்களை ரோந்து பணிக்கு அனுப்பியது, அப்போது இந்திய கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய  முறையில் சுற்றியதை, நோக்கி துரத்தி நிறுத்தப்பட்டது.

பிறகு விசாரணையில், படக்குழுவினர் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 425 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 61 கிலோ போதைப் பொருட்கள் படகில் தீவிர சோதனைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய கடலோர காவல்படை சமீபத்தில் இதுவரை எட்டு வெளிநாட்டு கப்பல்களை கைது செய்து ரூ.2,355 கோடி மதிப்புள்ள 407 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்