கொரோனா தொற்றுநோய் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 27 முதல் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில்,10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் ஆந்திர பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் மற்றும் நியாயமற்ற வழிமுறைகள்) சட்டம், 1997 இன் கீழ் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முதல் நாளில் தேர்வு தொடங்கிய ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, கர்னூல் மாவட்டத்தில் இருந்து தெலுங்கு வினாத்தாள் புகைப்படம் எடுக்கப்பட்டு வாட்ஸ்அப்பில் பரவியது.இதனையடுத்து,இரண்டாம் நாள் இந்தி தேர்வு மற்றும் மூன்றாம் நாள் ஆங்கிலம் தேர்வு வினாத்தாள் சத்ய சாய், கர்னூல் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது.
ஆனால்,வினாத்தாள் உண்மையில் வெளியாகவில்லை எனவும்,மாறாக அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சில ஆசிரியர்கள் வேண்டுமென்றே வாட்ஸ்அப்பில் வினாத் தாள்களை பரப்பினர் என்றும் ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக,ஆந்திர மாநில கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:”இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில ஆசிரியர்களின் கைவரிசையை நாங்கள் உடனடியாகக் கண்டுபிடித்தோம்.அவர்கள் சில வெளியாட்களின் உதவியுடன் வினாத்தாள்களின் ‘கசிவு’ குறித்து வதந்திகளைப் பரப்பினர்.இதன்மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்’,என்று தெரிவித்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், முறைகேடுகளுக்கு எதிரான விதிகளின் கீழ் தவறு செய்த ஆசிரியர்கள் மீது கைது மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…