இந்தியாவில் 4,01,078 பேருக்கு தொற்று உறுதி….! 4,187 பேர் உயிரிழப்பு…..!

Published by
லீனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். 3,18,609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,18,92,676  ஆகவும்,குணமடைந்தோர் எண்ணிக்கை 1,79,30,960 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,38,270 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 54,000 பேருக்கும், கர்நாடகாவில் 49,000 பேருக்கும், கேரளாவில் 38,000 பேருக்கும் தொற்றுகள் பதிவாகியுள்ளது.  தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மே 10-ஆம் தேதி முதல் மே – 14ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.

மேலும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு காணப்படுகிறது என்றும், ஏழு மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை  கொரோனா தொற்று காணப்படுவதாக கூறப்படுகிறது. பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக விஜயராகவன் அவர்கள் மூன்றாவது கொரோனா வைரஸ் அலையை தவிர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ள நிலையில், வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் அதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

1 hour ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

2 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

4 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

4 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

4 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

5 hours ago