சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 40 குரங்குகள்.!

Published by
Ragi

தெலுங்கானாவில் சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் ஒரே இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம்,மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சனிகபுரம் கிராமத்தில் மின்சார துணை மின் நிலையத்தின் பின்னால் உள்ள புதர் ஒன்றில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது .

கடுமையான துர்நாற்றத்திற்து பிறகு சடலங்களை கண்ட கிராமவாசிகள் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க , விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும்,இந்த செயலை செய்தவர்கள் மீது விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் சட்டம் 11(எல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 429 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மஹபூபாபாத் போலீஸ் துணை ஆய்வாளர் கூறியுள்ளார்.

மேலும் கூறி அவர் உள்ளூர் மக்கள் தங்கள் பயிர்களை காப்பதற்காக விஷம் வைத்திருக்க கூடும் என்றும்,அல்லது விலங்கு பிடிப்பவர்கள் வனவிலங்குகளுக்கு மயக்க மருந்து கொடுத்து,அதனை காட்டில் விட இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் , அதிகப்படியான மயக்க மருந்து பயன்படுத்தியதால் பல குரங்குகள் இறந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர் .ஆனால் இதுகுறித்த எதுவும் தெளிவாக தெரியவில்லை என்றும், நாங்கள் சுற்றியுள்ள கிராமங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் DFO தெரிவித்துள்ளது .

சாக்குப் பைகளில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குட்டிகள் உட்பட 40 குரங்குகள் உடல் பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது .மேலும் உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை நடத்த முடியவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த மோசமான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

27 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

52 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago