Visakapattinam Fire Accident [File Image]
ஆந்திர பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஒரு படகில் தீ பற்றியது. ஒரு படகில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த படகில் பற்றியது.
இதன் காரணமாக மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 35 முதல் 40 ஃபைபர் மீன்பிடி படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. படகுகளில் டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை இருந்ததால் தீ அடுத்தடுத்த படகுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.
தீ பற்றியது தெரிந்த உடன் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வீரார்கள், போராடி தீயை அணைத்து தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு படையினர் உடன் கடற்படையினரும் தீயை அணைக்க உதவி செய்தனர்.
இரவு நேரம் என்பதால், படகுகளில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் எதுவும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பான விசாரணையில் மர்ம நபர்கள் யாரேனும் தான் ஒரு படகிற்கு தீ வைத்து இருக்க கூடும் என அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
தீ விபத்து குறித்து விசாகப்பட்டினம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…