தனது 4 வயது மகனை கோவாவில் ஒரு தனியார் விடுதியில் கொலை செய்து உடலை வேறு இடத்திற்கு கடத்தி சென்றதாக பெங்களூருவை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன தலைமை அதிகாரியான சுசானா சேத் என்பவரை கோவா போலீசார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா எனுமிடத்தில் கர்நாடக போலீசார் உதவியுடன் கடந்த திங்களன்று கைது செய்தனர்.
4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.!
செய்வ்வாயன்று கோவா அழைத்து வரப்பட்ட சுசானா சேத் தற்போது நீதிமன்ற காவலில் கோவா போலீசார் விசாரணை வளையத்தில் உள்ளார். அவரிடம் காவல்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வரையில் தனது மகனை தான் கொலை செய்யவில்லை என்று தான் கூறி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தான் தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது மகன் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டான் என்றும் , சூட்கேஸ் எடை அதிகமானது தனக்கு தெரியாது என்றும் சுசானா சேத் போலீசார் விசாரணையில் கூறினார். சிறுவனின் பிரேத பரிசோதனை விவரத்திலும், சுசானா சேத் கைது செய்யப்படுவதற்கு 36 மணிநேரத்திற்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என்றும், சிறுவன் கழுத்து நெறிக்கப்பட்டோ, மூச்சு திணறல் ஏற்பட்டோ இறந்துவிட்டான் என்றும் சிறுவன் உடலில் ரத்த காயங்கள் இல்லை என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், கோவா போலீசார் சுசனா சேத்தை குற்றக்காட்சியை மீண்டும் உருவாக்குவதற்காக அவர் தங்கியிருந்த கோவாவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். இதுவும் விசாரணையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது இதன் மூலம், சிறுவனின் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என காவல்துறையினர் யூகித்தனர்.
ஆனால், சுசானா சேத் தான் தற்கொலைக்கு முயற்சித்த இடம் இது தான் என்று மட்டுமே போலீசாரிடம் காட்டியுள்ளார். தனது மகனை கொன்றதாக அவர் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று கோவா போலீஸார் தெரிவித்தனர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், இதுவரை குழந்தை இறந்ததற்கான எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…