ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் 4 பேருக்கு விடுதலை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியவர்களை ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தது.

ஐபிஎல் போட்டி பார்க்கும் பொது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் அதிலும் ஊழல் மற்றும் பல்வேறு பெட்டிங் இருக்கிறது என பல தரப்பு மக்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 13 பேர் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்துக்கு முன்னதாகவே கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதை தமிழக ‘க்யூ’ பிரிவு போலீஸார் கண்டுபிடித்து 21 பேரிடம் விசாரணையும் நடத்தினர். சென்னை க்யூ பிரிவு எஸ்.பி.யாக இருந்த சம்பத்குமார், போலி பாஸ்போர்ட் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தியபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பிருப்பதை முதலில் கண்டுபிடித்தார்.

மேலும் அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி பணம் வசூலித்த 3 பேர், பின்னர் அந்த வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு கண்காணிப்பாளர் சம்பத்குமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. பின்னர் இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த பல புரோக்கர்கள், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மகேந்தர்சிங் ரங்கா என்பவரை அணுகினர். நகைக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்யும் மகேந்தர்சிங் ரங்கா, பல போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். தன்னை அணுகிய புரோக்கர்களிடம் பல லட்சங்களை வசூல் செய்த மகேந்தர்சிங், அதில் சில லட்சங்களை எஸ்.பி. சம்பத்குமாரிடம் கொடுத்து, சிலரை சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் அதை தொடர்ந்து வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பளித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஐபிஎஸ் அதிகாரி அந்த நான்கு பேரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

2 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

26 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago