உத்தரபிரதேசத்தில் 18வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கடத்தி விற்க முயன்றுள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தில் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணத்திற்காக நான்கு பேர் கடத்தி சென்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி சீக்கிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 18 வயது சிறுமியை 1 ஆண் மற்றும் 3 பெண்கள் இணைந்து கடத்தியுள்ளனர். சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து கடத்தியதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து கடத்தப்பட்ட சிறுமியை ஹரியானாவின் பானிபட்டில் உள்ள ஒரு வீட்டில் பிணை கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து சிறுமி மயக்கத்தில் இருந்து தெளிந்த பின்னர் அவ்விடத்திலிருந்து தப்பித்து பெற்றோரிடம் சேர்ந்ததாக குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைன் அதிகாரி பூனம் சர்மா தெரிவித்துள்ளார். அதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் ஆகஸ்ட் 22-ஆம் தேதி குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைனை அணுகி புகார் அளித்ததை அடுத்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து நடந்த விசாரணையில் கரம் வீர், சரோஜ், ராதிகா மற்றும் பூஜா ஆகியோர் சிறுமியை வேறொருவருக்கு பணத்திற்கு விற்க முயன்றது தெரிய வந்தது. அதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…