சத்தீஸ்கர் மருத்துவமனையில் தீ விபத்தினால் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம்…!

Published by
Edison
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்,திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் 30-க்கும்அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.அதிலும்,கொரோனா வைரஸினால் அதிக பாதிப்பிற்கு உள்ளான 9 பேர் தீவிர சிகிச்சை (ஐசியூ) பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில்,நேற்று மாலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  திடீரென மின்கசிவு ஏற்பட்டதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலர் அறைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.மேலும், தீயானது மருத்துவமனை முழுவதும் பரவியது.இந்த தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதில், 29 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால்
தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,சத்தீஸ்கர் மாநில அரசு உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
Published by
Edison

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

5 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

6 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

6 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

7 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

8 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

9 hours ago