சத்தீஸ்கர் மருத்துவமனையில் தீ விபத்தினால் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம்…!

Published by
Edison
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்,திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் 30-க்கும்அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.அதிலும்,கொரோனா வைரஸினால் அதிக பாதிப்பிற்கு உள்ளான 9 பேர் தீவிர சிகிச்சை (ஐசியூ) பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில்,நேற்று மாலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  திடீரென மின்கசிவு ஏற்பட்டதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலர் அறைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.மேலும், தீயானது மருத்துவமனை முழுவதும் பரவியது.இந்த தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதில், 29 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால்
தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,சத்தீஸ்கர் மாநில அரசு உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
Published by
Edison

Recent Posts

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…

2 hours ago

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை.? சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…

2 hours ago

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…

4 hours ago

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…

4 hours ago

“திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

5 hours ago

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

14 hours ago