இமாச்சல பிரதேசத்திலுள்ள கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவின் பொழுது பாறைகள் உருண்டதால், அவ்வழியே வந்த சுற்றுலா வாகனத்தின் மீது பாறைகள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் இருந்த 9 பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அவர்கள் நேற்று அறிவித்திருந்தார்.
தற்போதும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவர்கள் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…