தேர்தல் செலவின பணம் பதுக்கியதாக எச்.ராஜா மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக நிர்வாகிகள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜ குற்றம் சாட்டிஇருந்தார். இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் எச்.ராஜாவின் குற்றசாட்டை நிராகரித்ததுடன் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், இவர் சட்டசபை தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தில் 4 கோடிபணத்தை பதுக்கி கொண்டார் எனவும், அதில் தற்பொழுது வீடு கட்டி வருகிறார் எனவும் ராஜினாமா செய்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் காரைக்குடியில் விசாரணை நடத்தி உள்ளார். இந்த விசாரணையின் பொழுது எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புகார் டெல்லியில் உள்ள பாஜக மேலிடம் வரை சென்றுள்ளது. எனவே தற்போது இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தேர்தல் சமயத்தின் பொழுது பணம் கையாடல் தொடர்பாக எச்.ராஜா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…