தேர்தல் செலவின பணம் பதுக்கியதாக எச்.ராஜா மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக நிர்வாகிகள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜ குற்றம் சாட்டிஇருந்தார். இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் எச்.ராஜாவின் குற்றசாட்டை நிராகரித்ததுடன் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், இவர் சட்டசபை தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தில் 4 கோடிபணத்தை பதுக்கி கொண்டார் எனவும், அதில் தற்பொழுது வீடு கட்டி வருகிறார் எனவும் ராஜினாமா செய்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் காரைக்குடியில் விசாரணை நடத்தி உள்ளார். இந்த விசாரணையின் பொழுது எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புகார் டெல்லியில் உள்ள பாஜக மேலிடம் வரை சென்றுள்ளது. எனவே தற்போது இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தேர்தல் சமயத்தின் பொழுது பணம் கையாடல் தொடர்பாக எச்.ராஜா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…